Friday, 7 July 2017

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்கவேண்டிய வளர்க்கவேண்டிய தெய்வீகதன்மைவாய்ந்த துளசிசெடி Thulasi Chedi Thulasi plant

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்கவேண்டிய வளர்க்கவேண்டிய தெய்வீகதன்மைவாய்ந்த துளசிசெடி
துளசி செடி வளர்போம் சகல நன்மைகளையும்  பெருவோம். 
வீட்டில் ஒவ்வொருவரும்  
துளசி செடி நட்டு வளர்போம்
துளசி செடியை வீட்டில்
வளர்ப்பதன் மூலம் சகலநன்மைகளும்
வளர்ப்பவர்கள் பெறுகின்றனர் துளசிச்செடியில் மூலிகையின்
பயன்கள் நிறைந்துள்ளது வீட்டைச்சுற்றி துளசி செடி்கள் வளர்பதால் வீட்டை சுற்றி மூலிகை வாசமும் தெய்வீக தன்மையும் நிரைந்திருக்கும் வீட்டில் எந்த விதமான தீய சக்திகள் கண் திருஷ்டிகள்
நோய் நொடிகள் அண்டவிடாமல் தடுக்கும் வல்லமை துளசி செடிக்கும் 
அதன்வாசனைக்கும் உண்டு .
துளசி செடியை உங்கள் வீட்டில் வளர்க்கும்  பொழுது அதில் பூக்கள் அதிக அளவில் வரும் அப்பொழுது ஒரிரு பூக்களை மட்டும் விட்டுவிட்டு மற்றபூக்களை கிள்ளிவிடனும் இப்படி செய்வதால் துளசிசெடி வாடாமல் நீண்டநாள் பசுமையாக இருக்கும் துளசி செடியில் வரும் பூவானது காய்ந்தால் அதில் துளசி விதைகள் இருக்கும் அதை மண்ணில் தூவிவிட்டால்  துளசி செடிகள் முளைக்க ஆரம்பிக்கும்
அதை எடுத்து வேறு தொட்டிகளில் நட்டு நண்பர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செடிவளர்க்க இடமிருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் கட்டாயமாக  வியாபாரம் மற்றும் தொழில் செய்யுமிடதிலும்  துளசிசெடியை வளர்க்கணும் வியாபாரம்
செழிக்கும் தொழிலில் முன்னேற்றம் எற்படும் கண்திருஷ்டியை போக்கிவிடும் தன்மைகொண்டது மாணவர்கள் அவர்களது கையால் துளசிசெடியை நட்டு வளர்த்துவர அவர்கள் நட்டு வளர்த்த துளசி செடி எந்த அளவிற்கு பசுமையாக வளர்கின்றதோ அந்த அளவிற்கு கல்வியில் முனேற்றம் எற்படுமாம்  கல்வியில் சிறந்துவிளங்குவார்களாம் துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணிநேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசி செடி வளர்போம்
சகல நன்மைகளையும் பெருவோம்,
இதை படித்தவர்கள் ஷேர் பண்ணுங்க
நீங்களும் துளசி செடியை வாங்கிவந்து  வளர்த்திடுங்கள் வாழ்க இயற்கைவளமுடன்
இயற்கையின் ஆசியுடன் இயற்கையை போற்றுவோம் மரம் வளர்போம் மழைபெருவோம் மழைநீரை சேமிப்போம்
நல்லதே செய்யுங்கள்
அதை இன்றே செய்யுங்கள்
நன்றி-

kungfu news Chennai